பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

அண்டம் தொடர்பான வேள்வி

வையத் தலைவன் ஆயிரம் தலைகளுடையோன் ஆயிரம் விழியுடையோன், ஆயிரம் அடிகளுடையோன் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் நிறைந்திருப்பவன் பத்துத் திசைகளையும் கடந்து பரந்திருப்பவன்.

(இருக் 10)

எங்கும் நிறைந்திருப்பவன், எங்கும் நிலைத்திருப்பவன் இறைவன், இதில் எள்ளளவும் ஐயமில்லை. பிறப்பு, இறப்பு என்கிற பொது நிலைகளுக்கு அப்பாற்பட்டு அழிவில்லாத அமராதிபன் அவன். (இருக் 10)

இத்தகையது அவன் பெருமை உலகத் தலைவனோ இதற்கும் மேலானவன். பரம்பொருளின் நிறைந்திருக்கும் தன்மையில் அனைத்து உயிர்களின் பங்கு கால் பங்கே. 1£ முக்கால் பங்கை எட்டி விட்டால் அமரர் உலகில் அழியா நிலை பெறுவர். (இருக் 10)

த.கோ - தி.பூரீ