பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 172

நடைமுறை உலகின் பிடியிலிருந்து விடுபட்டு

t

மண்ணகத்தின் கொடுமுடியை அடைந்து விட்டேன்; அங்கிருந்து நடுவானை எட்டுகிறேன். பின்னர் அங்கிருந்து விண்ணகத்திற்குச் செல்கிறேன். இப்பொழுது நான் மட்டற்ற மகிழ்ச்சிக் கடலில் திளைத்து நிற்கிறேன். (அதர் 4)

உண்மையைத் தேடுபவனே, உன் ஆன்மாவின் நிலையைப் புரிந்து கொண்டு அதனுடன் முழுவதுமாக ஒன்றியிரு. (யசுர் 8)

எனது புரிதல் சிறப்பானதாகவும் முழுமையானதாகவும் இருக்கட்டும், செஞ்ஞாயிற்றைப் போன்று ஒளி வீசட்டும்.

(இருக் 10)

நன்குணர்ந்த முனிவர் கூறுகிறார்: என் உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது பொருளாசை எனக்கில்லை, புகழாசையும் தான்.

(இருக் 10)

இருண்மையின் எல்லையைக் கடந்து நிற்கும் விரிந்து பரந்த பேரொளியை நான் அறிவேன். (யசுர் 31)

உண்மையைத் தேடுகிறவன் தனது விடாமுயற்சியால் உயர்ந்த நிலையை அடைகிறான். புகழின் உச்சத்தை எட்டி செம்பருதிபோல் ஒளிவீசி நிற்கிறான். (அதர் 13)

நற்றமிழில் நால் வேதம்