பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O

முற்றுணர்ந்த முனிவர்கள்

படைக்கும் ஆற்றல்பெற்ற அறிவுத்திறன் கொண்ட அருளாளர்கள் அழகான இறக்கைகள் படைத்த பறவைகள் போல் தங்கள் வாழ்க்கையை இறைபணிக்கே தந்துவக்கட்டும்.

(இருக் 10)

உயர்ந்த நிலையை அடைய எண்ணும் தவயோகியர் எடுத்த செயலில் முழு மனத்துடனும் அன்பின் ஊற்றத்துடனும் ஈடுபடுகின்றனர். ஊற்றத்துடன் தம்தம் பணியில் ஈடுபட மக்களை ஊக்குவிக்கிறார்கள். சமூகங்களும், தேசங்களும் இந்த முறையில்தான் வலிமை பெறுகின்றன. (அதர் 19:

ஆசைகளைத் துறந்து, அன்பூற்றினில் திளைக்கும், உந்துதல் பெற்ற இந்த முனிவர்கள்

நிறைந்த புகழையும் நிலையான மன நிறைவையும் பெறுகிறார்கள். (சாம 92

நற்றமிழில் நால் வேதம்