பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198

அமைதியான தன்னம்பிக்கை

வாரி வழங்கும் கொடை வள்ளலாகிய பரம்பொருள் நமக்கு அனைத்துச் செல்வமும் வழங்கியிருக்கிறது. அவ்வாறிருந்தும் நமது ஆன்மாவில் முழுமையில்லை என்று எண்ணி, மேலும் மேலும் ஆசைப்படுகிறோம். கடவுள் நமக்கு இணையற்ற திடம் அளித்திருக்கிறான் அப்படியும் வலுவற்றவர்களாகவும், நீர்த்துப் போனவர்களாகவும் நமக்கு நாமே எண்ணிக் கொள்கிறோம். வாழ்க்கைப் போராட்டங்களை அமைதியான தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ளும் வகையில் இறைவனுடைய அன்பு நீரோட்டம் நமது நாடி நரம்பு நாளங்கள், ஆன்மா இவற்றினுடே பாய்ந்து வரட்டும்.

(இருக் 8)

ஓ, மனித சமுதாயமே, உங்கள் யாவரையும் நான் ஒரு குறிக்கோளோடு பிணைக்கப்போகிறேன். மனித நல்வாழ்வு தான் அந்தக் குறிக்கோள்.

நற்றமிழில் நால் வேதம்