பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

ஒன்றிணைந்த அன்புடனும் நல்லெண்ணத்துடனும் நீங்கள் சேர்ந்து பாடுபடுங்கள். இன்ப நலன்களைச் சமமாகப் பகிர்ந்து நுகருங்கள். மனமொன்றி உழைத்து எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்களாக. உங்கள் குறிக்கோளில் வெற்றி பெற, என்றுமே நல்லிணக்கத்துடன் ஒன்று சேர்ந்து உழைப்பீர்களாக.

(அதர் 3)

இறையருள் பெற்றவர்கள், தெய்வீகக் குணநலன்கள் கொண்டவர்கள், உலகில் தெய்வத் திருமொழிகளைப் பரவச் செய்கின்றனர். (இருக் 10)

எண்ணும் எண்ணங்களுக்கும் வெளிப்படும் செயல்களுக்கும் சீரான தொடர்பு இருக்கவேண்டும்.

(அதர் 2)

நன்னடைத்தை, நேர்மை இவற்றைக் கடைப் பிடிப்பவர்களின் வழி முறைகளை நன்கு கவனியுங்கள். முனிவர்கள் வகுத்துள்ள வழித் தடத்தில் செல்லுங்கள். மகிழ்ச்சிக்கு இட்டுச் செல்லும் பாதை இதுவே. அறிவொளி பெற்ற ஆன்மாக்கள் மகிழ்ச்சியுடனும், தெய்வீக ஆசி பெற்றும் வாழுமிடம் இதுதான்.

(அதர் 19)

மக்கள் தலைவனே, உன்னிடத்தே தெய்வீக குணநலன்களை இறுத்திக் கொள்வாய். (யசுர் 1)

த.கோ - தி.யூரீ