பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"डू

வையகத்தின் சிறந்த அறிவாளிகள்

தன்னுடன் வாழ்விக்கும் வாழ்த்துகளையும் உயிரற்ற பொருள்களுக்கும் பொலிவையும் ஏந்தி, எழில் மிளிரும் காலைப் பொழுது, உலகெங்கும் தன் பொன்னொளியைச் சிந்துகிறது. எண்ணற்ற பகல் பொழுதுகளைக் கடந்து இன்றையது கடைசியாகப் புலருகிறது; ஆனால் அதுவே இனி தொடரப்போகும் அற்புதமான காலைப் பொழுதுகளுக்கு முன்னோடி. - (இருக் 1)

முகிலைத் தாங்கி வரும் பெருங்காற்றே, வல்லமை பொருந்திய வையகத்தின் ஆற்றலாகிய வானகம் என்கிற கருப்பையில் உன்னை வளரவிடுகிற காரணத்தினால், விண்மீன் அடர்ந்திருக்கும் வானில் பேரொளியாய்ப் பொலிகிறது. (இருக் 2) புடவியின் ஆற்றல் அளவிடமுடியாத திறந்த வெளியில் 1£

வளர்கிறது, அதற்குப் பலம் சேர்க்கின்றது ஆவிச் சுருள்கள் பல. மனித குலத்தின் நண்பனாகிய இந்த

த.கோ - திரு