பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

வீறியமிக்க போர் Lopai667

தீரமிக்க போர் மறவர்கள் எழுச்சி மிக்கவர்கள், கொடிய காட்டு விலங்குகளைப்போல் வலிமை மிக்கவர்கள், உலகைத் தங்கள் ஆற்றலினால் அதிர்வுறச் செய்பவர்கள். நெருப்பைப் போன்று ஒளிர்பவர்கள். அத்துடன் இளகிய நெஞ்சமுடையவர்கள். ஓ, போர் மறவர்களே, எதிரிகளை முறியடித்து மக்களின் செல்வத்தை அவர்களிடமே சேர்ப்பித்து விடுங்கள். (இருக் 2)

நமது வில்லின் வலிமையால் எதிரிகளின் உடைமைகளைப் பறித்திடுவோம். போர்க்களத்தில் நமது வில் நமக்கு வெற்றி தேடித் தரட்டும். கடும் போர்களில் நாம் வெற்றி பெறுவோமாக. நமது எதிரிகளுக்கு நமது வில் துன்பத்தையும், துயரத்தையும் அளிக்கட்டும். வில்லேந்திப் பகை நாடுகள் யாவற்றையும் அடக்கி ஆள்வோமாக. (இருக் 6)

நற்றமிழில் நால் வேதம்