*
230
உனது மனம் விண்ணுக்கும், மண்ணுக்குமாக அல்லல் படுகிறது. அதை உன்னிடமே அழைத்துக்கொள்; அது உனது கட்டுப்பாட்டில் இருக்கட்டும். (இருக் 10)
கடந்த காலத்தில் நடந்து முடிந்து போன நிகழ்ச்சிகள், எதிர் காலத்தில் நடைபெறப் போகிற நிகழ்ச்சிகளுக்குமாக உனது மனம் மாறி மாறிச் செல்கிறது. அதை உன்னிடமே அழைத்துக் கொள், -
உனது கட்டுப்பாட்டில் அது இருக்கட்டும். (இருக் 10)
எல்லாம் உணர்ந்த இறைவ, படைப்பின் முதல்வனே,
உண்மையைக் கண்டறிய எங்கள் பார்வையைத்
தூய்மைப் படுத்திக் கொள்ளும் வழியைக் கூறுவாய்.
(யசுர் 4)
உறுதியாக நேராக நில். உன் கடமைகளை முறையாக நிறைவெற்ற, உன் பொறுப்புகளை ஏற்று நடத்த, உன் உடலைப் பாறைபோல் உறுதியாக்கிக் கொள். துன்பங்களிலிருந்து மீண்டு, செல்வமீட்டி, வளமை பெற்று திண்மையாக நலமாக நீ நூற்றாண்டு வாழ்வது உறுதி. (அதர் 2)
தீவினையே, உன்னை நெருப்பு விழுங்கிடட்டும். புகை முகில்கள் உன்னை வெகு தொலைவிற்குக் கொண்டு செல்லட்டும். பெருந்தன்மையுள்ள, தூய அடியார்களை இறைவன் வாழ்த்தி அருளட்டும். (அதர் 6)
铁* நற்றமிழில் நால் வேதம்