பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

இசைவிணக்கம்

உணர்ச்சிகளைக் காட்டிலும் அறிவுக்கு முதன்மையை அளி. உணர்ச்சி வயப்பட்ட உனது நெஞ்சத்தையும், தருக்க முறையான உனது மனதையும் ஒரே உடம்பில் தான் இறைவன் வைத்திருக்கிறான். உணர்ச்சிகளால் ஊசலாடாதே, வெறும் தருக்க நூலில் மட்டும் மயங்கிடாதே. நெஞ்சத்திலிருந்து தூண்டுதல் பெறு, ஆனால் மூளையிலிருந்து வழிகாட்டுதல் பெற்று உறுதியாக அடியெடுத்து வைத்து முன்னேறு. நெஞ்சத்தைக் காட்டிலும் அறிவின் இடம் உயர்ந்தது. நுண்ணறிவுள்ள, உள் ஊக்கம் பெற்ற அறிவர்களின் அடிச்சுவட்டில் உனது அறிவை வளர்த்துக் கொள்.

(அதர் 10)

LAL GÃO

நற்றமிழில் நால் வேதம்