பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

255

ஓ, யாவும் அறிந்த மெய் இறையே, இறப்பின்மையை அளிக்கும் தெய்வீக ஒளி எங்கு இருக்கின்றதோ, மெய்யறிவொளி வழங்கும் ஞாயிறு எங்கு ஒளிர்கின்றதோ, ஆழ்ந்த அமைதி எங்கு ஆட்சிபுரிகின்றதோ, அந்த உரிமை உலகிற்கு எனக்கு வழி காட்டிடுவாய். இறைவா, உனது, தோள்கள் பரந்தவை, உறுதியானவை. உனது எல்லையற்ற பரந்த நிழலில் நாங்கள் பாதுகாப்பை உணர்வோமாக. (அதர் 19)

"डू

{

வானத்தை ஆய்ந்து நாடிச் செல். வாழ்த்துக்குரிய பேறு உனக்குக் கிட்டட்டும்.

(யசுர் 6)

துணிவுடன் அஞ்சாது முனைப்புடன் செயலாற்றித் தீமைகளை வெற்றி கொள். உனது நெஞ்சுரத்தை நன்கு புரிந்துகொள். எவருக்கும் அஞ்சாதிரு. தீர்மானமாக, உறுதியாயிருப்பாய். (யசுர் 6)

வீரமிக்க மாந்தனே, எதிரியின் வல்லந்த ஆற்றல்களையெல்லாம் நொறுக்கிவிடு. (யசுர் 9)

போர் மறவனே, விரைவாக முன்னேறி எதிரியை அழித்துவிடு. (யசுர் 11)

نما

த.கோ - தி.யூரீ