பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257

ஒளிவீசும் ஆன்மாவே, உறுதியே உனது வன்மை

கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு * o

அறியாமை இருளை அகற்றிடுவாய். *

இதன் மூலம் உனது ஆளுமையை வெளிப்படுத்திடுவாய், (சாம 413)

உணர்ச்சி ஓட்டங்கள் நமது நன்னடைத்தையை

அழித்துவிடக் கூடாது. அவை தாங்களாகவே செத்து மடியட்டும். (இருக் 1)

உன்னை ஒருவன் சாவித்தாலோ, உனக்குக் கேடு செய்தாலோ, எதிருக்கு எதிராக நீயும் அவ்வாறு நடந்து கொள்ளாதே. உனது வேண்டுதல்களின் மூலம் அவன் இறை அருள் பெற்றிட வேண்டிடுவாய். (இருக் 1)

ஏமாற்ற உரைகளாடி, வஞ்சகப் புகழ்பாடி, நம்மைத்

தவறான பாதைகளுக்கு இட்டுச் செல்பவனுடைய

தவறான போக்கு அவனுள்ளேயே அழிந்து போகட்டும். (இருக் 2)

மாசற்றவரை அல்லல் படுத்துகிறவன் மனிதனேஅல்லன். அவனொரு ஓநாய். அவனிடமிருந்து ஒதுங்கியே இரு.

(இருக் 2)

தன்னைத் தானே புரிந்து கொள்ளும் நிலையில்

ஒருவனுடைய தீய ஆசைகள் தாமாகவே கருகி அழிந்து போகின்றன. (இருக் 2)

த.கோ - தி.யூரீ