பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

շ77

இரவும் விடியலும்

புதையல் அடங்கிய ஒரு மரத்தை இரண்டு ஆர்வலர்கள் நெருங்குவதைப் போல, அவையை நோக்கிப் புகழப் பாடல்கள் பாடிக்கொண்டு வருகிற இரட்டை அந்தணர்களைப் போல பல இடங்களுக்கும் சென்று வருகிற மக்களின் இரட்டை தூதுவர்களைப்போல, இரவு பகலாகிற தெய்வீக இரட்டை ஆற்றல்களே, பொதுவான ஒரு குறிக்கோளுடன் இணைந்து நெருங்கி வாருங்கள். (இருக் 2) காலைப் பொழுதில் தேரில் பவனிவரும் இரண்டு போர் வீரர்கள் போல, தங்களை நன்கு அலங்கரித்து வருகிற இரண்டு அணங்குகள் போல, மக்களிடையே, அறிவுக்கூர்மையுள்ள புதுமண இணையர்களைப் போல, எங்களை நெருங்கி வாருங்கள். (இருக் 2)

த.கோ - தி.யூரீ

$