பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285

முழு நிலாக் காலம்

ஒளிமயமாய் ஒளிரும் உவாமதி இரவே, நான் நன்கு ஆக்கியிருக்கும் புகழ்ப் பாடல்களால் உன்னை வழிபடுகின்றேன். அவர் நம் வேண்டுதல்களுக்குச் செவி சாய்க்கட்டும்; அவற்றை ஏற்றுக் கொள்ளட்டும். நமது எண்ணங்களையும், செயல்களையும் உலகம் மயங்கும் இன்னிசையாக ஒன்றிணைக்கட்டும்.

(இருக் 2)

வாரி வழங்கும் பண்பு படைத்த முழு நிலவே, அழகும், கவர்ச்சியும் கொண்டுள்ள நீ, எங்களுக்கு மன அமைதியையும் செழிப்பையும் அளிப்பாய்.

உனது வாழ்த்துகளை ஆயிரம் மடங்கில் எங்களுக்கு அருள்வாய். (இருக் 2)

த.கோ - திரு