பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

;

18

விரிந்து பரந்து செல்கின்ற சீரும் சிறப்பும் பெற்ற விடியலைச் சுற்றிலும் செவ்வண்ணம் கொண்ட சுடரும் ஒளிக்கதிர்கள் உள்ளன. வீரம் செறிந்த வில்லாளியைப் போலும் விரைவு கொண்ட போர் வீரனைப் போலும், அவன் மனச் சோர்வை விரட்டி அடிக்கிறான்.

(இருக் 6)

பேரொளிமயமான பருதியின் உதயம் புதியதோர் நாளின் வரவை அறிவிக்கிறது.

அதன் செவ்வண்ண ஈட்டிகள் செங்கதிர்ப் பொன்னிற வாயிற் கதவுகளை உந்தித் திறக்கின்றன. நாம் செல்லவேண்டிய பாதைக்கு வழிகாட்டுகின்றன. இரவின் கருமையும், அயர்ச்சியும் மறைந்து போயின. ஒவ்வொரு விடியலும் நீண்ட வாழ்க்கைப் பயணத்தில் வெற்றிக்கு மேல் வெற்றிக்கு வழிகாட்டுக. (இருக் 1)

செஞ்சுடர்த் தேவனே, எங்களைப் பிணைத்திருக்கும் தளைகளிலிருந்து விடுபட வைப்பாய். இயற்கை அளித்திடும் வளங்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் தேவனே, பிறவியெடுக்கும் மனித இனத்தைக் காப்பாற்று. ஒளியின் தலைவனே, விண்ணையும் மண்ணையும் ஆள்பவனே, உன்னுடைய வாழ்த்துப் பெற்று நாங்கள் முன்னேறுவோமாக. (இருக் 7)

புல் பூண்டு, செடி கொடிகளுக்கு உயிரளிப்பவனே, தெய்வமே, உன்னிடமன்றோ நிலத்திணை இயங்குதினைப்

நற்றமிழில் நால் வேதம்