பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

29O

தங்களை வணங்குபவர்களைத் தீமை செய்யும் தீயவர்களிடமிருந்து காக்கின்றன. கெடுமதியாளர்களிடம் தங்கள் நிறைவின்மையை வெளிக்காட்டுகின்றன. (இருக் 7)

தெய்வீக விரைவாய் விளங்கும் வளி இறையே, உலகெங்கிலும் நிறைந்திருக்கும் படைப்பாற்றலுக்கு அடிப்படைப் பண் நீ. (இருக் 7)

ஆற்றல் வாய்ந்த காற்றுகளே, அண்ட வேள்வியின் தலைவர்களே, பாய்ந்து வரும் பருந்துகளைப் போன்று சீறி வருவீர்களாக, வலுவான குதிரைகள் பூட்டிய தேரிலமர்ந்து அருவியாக மழையைக் கொட்டச் செய்வீர்களாக.

(இருக் 20)

புயலைப் போன்று முழக்கம் செய்பவையும், மின்னல் போல சடசடவென வெடிப்பவையும், ஆழியின் அடி ஆழங்களைச் சீறிச் செல்பவையுமாகிற முகில்களைத் தாங்கிச் செல்கிற காற்றுகளை நான் தொழுகின்றேன். (இருக் 8)

புகழ்ப் பாடல்கள் மூலம் நேர்வழியில் சிந்தனை செய்யும் முனிவர்கள் போல, தங்கள் காணிக்கைகளின் மூலம் தெய்வங்களை வழிபடுகிற பக்திமான்கள் போல, நகைகளினால் அலங்களிக்கப்பட்டு வியப்புக்குரியதாய்க்

நற்றமிழில் நால் வேதம்.