பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297

மகிழ்ச்சி தருபவையாயிருக்கட்டும். பழுப்பு, கறுப்பு, சிவப்பு வண்ண வண்ணக் கோலங்கள் ஆகிய நிறங்கள் கலந்த வனப்புமிகு நிலத்தாயே, உனக்குப் பாதுகாப்பளிப்பவர் வல்லமை வாய்ந்த இறைவன். இந்த மண்ணில் தோற்கடிக்கபடாதவனாகப் புண்படுத்தப் படாதவனாக

நான் நிமிர்ந்து நிற்கிறேன். (அதர் 12)

ஓ, நிலமே, உனது மையமான தொப்புழ்ப் பகுதியில் உடலிலிருந்து வெளிப்படும் உரமளிக்கும் ஆற்றல் இவற்றுக்கு இடையே இருக்கும் பகுதியில் என்னை நிலைநிறுத்தி விடு. எல்லாப் பகுதிகளிலிலிருந்தும், என்னைத் தூய்மைப் படித்திடுவாய் இந்த மண் என் தாய்; நான் அவளுடைய மகன். வரையற்ற நிலப்பகுதி என் தகப்பனார்; அவர் எனக்குத் தேவையானவற்றை எல்லாம் அளித்திடட்டும்.

(அதர் 12)

நிலத்தின் மேல் உயரமான திருவிடம் அமைக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு துறைகளில் பயிற்சிபெற்ற தொழிலாளிகள் வேள்வியின் வலையைப் பின்னுகின்றனர். புகழ்ப் பாடல்களைத் தொடங்குவதற்கு முன் இரண்டு உயரமான பளபளப்பான தூண்கள் நடப்படுகின்றன. தன் செழித்து வளரும் நேர்த்தியிலேயே எங்களுக்கும் நிலம் வளமருளட்டும். (அதர் 12)

த.கோ - தி.யூரீ