பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

299

நிலத்துக்குள் தீ உள்ளது அதேபோல் செடி கொடிகளிடமும், தண்ணி. அதை எடுத்துச் சுமக்கிறது. கல்லிலும் நெருப்பு உள்ளது. மாந்தர்களுக்குள்ளிலும் ஓர் ஆழத்தில் தீ இருக்கிறது. பசுக்களிடமும் குதிரைகளுக்குள்ளும் ஒரு தீ இருக்கிறது. (அதர் 12)

விண்ணுலகில் எரிகிற அதே நெருப்பும் நடுவானில் எரிகிற அதே நெருப்பும் இந்தத் தெய்வீகத் தீய்க்கு உரியதே. தேவர்களுக்கு அளிக்கப்படும் அவிர்பாகத்தை தாங்கிச் செல்லும் உருகிய வெண்ணையை விரும்பும் இந்த நெருப்பை மனிதர்கள் தூண்டுகிறார்கள்.

(அதர் 12)

நெருப்பின் நிறங்கொண்ட மேலங்கி அணிந்துள்ள நிலமகள் தழும்பேறிட முழங்காலிட்டு என்னில் உள்ளார்வத்தைக் கொழுந்து விட்டு ஓங்கி எழச் செய்யட்டும். என்னை அவள் பேரொளியாகச் செய்வாளாக.

(அதர் 12)

எந்த நிலத்தின் மேல் காடுகளில் தலைவர்களாகிய மரங்கள் உறுதியாக நிற்கின்றனவோ,

ஆதரவு தரும் அந்த நிலத் தாயை நாங்கள் வழிபடுகிறோம். (அதர் 12)

த.கோ - தி.யூரீ