பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&#ίκ 3 OO

செய்யும் வேள்விகள் பல்வேறு தெய்வீக

疆 ஆற்றல்களுக்காக அளிக்கப்படும். }. தேவருணவின் பங்கு ஆகியவற்றைத் தாங்கி நிற்பது

தாய் நிலமே. மக்களுக்கு உணவு, தண்ணி, அளிப்பதும் நிலமே. மூச்சு, உயிர் எங்களுக்கு அவள் அளிக்கட்டும். நீண்ட வாழ்நாளை அவள் எங்களுக்கு வழங்கட்டும்.

(அதர் 12)

ஓ, தாய்நிலமே, உன்னிடமிருந்து தோன்றும் நறுமணத்தைச் செடி கொடிகளும், தண்ணிரும் பல இடங்களிலும் பரப்புகிறது. ஞாயிற்றின் கதிர்களும் இந்த மணத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. என்னையும் இனிய இயல்புடையவனாக மாற்று. என்னை எவரும் வெறுக்காதிருக்கட்டும்.

(அதர் 12)

ஓ, தாய்நிலமே, தாமரை மலரில் புகுந்துள்ள இந்த நறுமணம் அழிவற்ற தேவர்களால் முதன் முதலில் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டது. என்னை இனிய இயல்புடையவனாக மாற்று. என்னை எவரும் வெறுக்காதிருக்க்ட்டும்.

(அதர் 12)

உனது நறுமணம் ஆடவர்களிடமும் பெண்களிடமும் } பரந்துள்ளது.

அந்தப் பெருமிதமும் ஒளியும் ஆடவர்களிடமும் அந்த ጙ வீறியம் காட்டு விலங்குகளிடமும், யானையிடமும்

உள்ளது.

f

நற்றமிழில் நால் வேதம்