பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305

விண்ணுலகம், மண்ணுலகம், நடுவானம், ஆகியவை

எனக்குப் பரந்த இடத்தையளித்துள்ளன. 駕 பேரண்ட ஆற்றல்கள் யாவும் ஒருங்கிணைந்து * மெய்யான கூரறிவை அளித்துள்ளன. (அதர் 12)

வெற்றிபெற்றவன் நான். உலகில் மேன்மையான இடத்தைப் பெற்றவன் என்று கருதப்படுகிறேன். எங்குமே எனக்கு வெற்றி, எதிலுமே எனக்கு வெற்றி. எத்திசையிலும் நான் ஒரு வெற்றி வீரன்தான்.

(அதர் 12)

சிற்றுர்களில் காட்டில், குழுக்களில் வழிபாட்டுக் கூட்டங்கள், ஆய்வு அரங்கங்கள், எல்லா இடங்களிலும் உன்னைப் பற்றிப் புகழ்ந்து பேசுவோம். (அதர் 12)

குதிரை புழுதியை வாரி இறைப்பது போல். பிறந்த நாளிலிருந்து நிலம் தன்னிடத்து வாழ்பவர்களை வெவ்வேறு இடங்களில் பரவலாக வாழச் செய்கிறது. உலகத்தைக் காப்பவள், காட்டிலுள்ள மரங்களையும் செடி கொடிகளையும் பாதுகாப்பவள் என்ற மகிழ்ச்சியில் துள்ளி விளையாடுகிறாள்.

(அதர் 12)

நான் எது பேசுகிறேனோ, அது இனிமையாகவே இருக்கும். நான் எதைக் கண்டாலும், அது என்னுடன் ஒட்டி உறவாடுகிறது. அந்த வேளையில்

த.கோ - தி.பூரீ