பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

நான் நெருப்புப் போன்றவன், தீவிரமானவன். என்னிடம் சீறி வருபவர்களை } நான் அடித்து நொறுக்கி விடுகின்றேன். (அதர் 12)

நிறை அமைதி, இனிமை மணம், அருள்நிறை மண்ணகம், மார்பில் பால் நிறைந்த அமிழ்தம் ஆகிய அருங்குணம் கொண்ட நிலத்தாய் தன் அருள் வாழ்த்துகளை எனக்கு வாரி வழங்கட்டும் .

(அதர் 12)

அன்னை நிலமே, உனது நெஞ்சத்தில் சோர்வுக்கும், அழிவுக்கும் இடமளிக்காதே நெடுங்கால வாழ்வில் நாங்கள் ஊக்கத்துடனும், எச்சரிக்கையுடனும் இருந்து, பற்றார்வத்துடன் உன்னைத் தொழுது நிற்கவேண்டும். (அதர் 12)

நற்றமிழில் நால் வேதம்