பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

315

விளைநிலத் தலைவன், எங்களிடம் பரிவு காட்டட்டும். புண்படுத்திக் கொள்ளாமல் அவனை நாங்கள் பின்பற்றுவோமாக. (இருக் 4)

வலிந்திழுக்கும் காளைகள் மகிழ்ச்சியுடன் உழைக்கட்டும் அவ்வாறே நம் மனிதர்களும் உழவுச் சால்களும் நிலத்தில் மகிழ்வுடன் ஒன்று சேரட்டும். முட்கோலை மகிழ்ச்சியுடன் கையாளுங்கள். (இருக் 4)

ஓ, கலப்பையின் கொழுமுனையே, கலப்பையே, எங்கள் புகழ்ப் பாடல்கள் உங்களை மகிழ்விக்கட்டும். வான் விசும்பின் மழைத்தண்ணிரால் நிலத்தை நனைத்திடுவீர்.

(இருக் 4)

ஓ, அருள்மிகு படைச்சாலே, எங்களிடம் நெருங்கி வா. உனக்கு எங்கள் வணக்கங்கள். நீயும் எங்களிடம் பெருந்தன்மையுடனும், பலனளிக்கும் எண்ணத்துடனும் நடந்து கொள்வாய். (இருக் 4)

ஒ, பெருவீரனே, படைச்சாலைக் கையிலெடுத்துக் கொள் ஊட்ட உணவின் தலைவன் வழிகாட்டட்டும். நிலமென்னும் நல்லாள், கிடைக்கும் நல்ல விளைச்சலை எங்களுக்களிக்கட்டும். (இருக் 4)

உழுகின்ற கொழுமுனைகள் மண்ணைப் புரட்டி எடுக்கட்டும். உழுபவன் மகிழ்வுடன் காளைகளை ஒட்டிச்செல்லட்டும் தேனையும் தண்ணிரையும் முகில்கள் நிலத்தில் தெளிக்கட்டும்.

த.கோ - தி.ழரீ