பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

வாழ்வின் நிலைத்திருக்கும் தீச்சுடர்

வேற்றுமையில் ஒற்றுமையைப் பார். பல்வேறு வடிவங்களில் ஒரே தெய்வீக வடிவைக் காண். அவனுடைய நிறைவை அளவிட முடியாது. அவனுடைய பெருமை ஈடு இணையற்றது. நாம் காணும் ஆனால் அதே சமயம் புரிந்து கொள்ள முடியாதவையுமான எண்ணிலடங்கா உலகங்களும் ஞாயிறுகளும் கோள்களும் இயற்கையின் ஆளுகைக்கு உட்பட்டவை. வெவ்வேறு வடிவங்களில் தென்பட்டாலும் என்றும் நிலைத்திருக்கும் பேரொளி ஒன்றே. காலைப் பொழுதில் ஒளிக் கதிர்களை உலகில் துவும்; மாலையில் உலாவரும் வெண்முகில் கூட்டங்களின் மேல், வகை வகையான வண்ணங்களைத் -

தீட்டுவதும் ஒரே செஞ்சுடரே. (இருக் 8) #