பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

প্লু" 332

§ இரு பேரன்னைகளின் குழந்தையாகிய புகழ்பாடுபவன்,

குழுவில் தலைவனாக அவன் , மேலே தொடர்ந்து நடக்கிறான். அதே நேரம் மற்றவர்களுக்குத் துணையாக நிற்கவும் செய்கிறான். புகழுரைகள் பேசுபவர்கள் அவன் பெருமையைப் பாடுகிறார்கள். பேரண்ட ஆற்றல்களின் மூலாதாரம் பெருமை மிக்கது.

(இநக் 3) போர்க்களத்தில் போரிடும் அன்பிற்குரிய வீரனிடம் நெருங்கி வருவதெல்ல்ாம் சென்று விடுவதைப்போல், நெஞ்சத்திற்குள் இடம் பெற்றிருக்கும் போற்றிப் பாடல் கடவுளுக்கான பால், தேறலுடன்ன இணைந்து விடுகிறது. பேரண்ட ஆற்றல்களின் மூலாதாரம் பெருமை மிக்கது.

(இருக்)

ஆற்றலுள்ள பழையகால முதுகணாளன் ஒரே நிலையில் உலாவுகிறான். அழகான உருவங்களில் தோன்றி நம்மைப் பார்வையிடுகிறான். பேரண்ட ஆற்றல்களின் மூலாதாரம் பெருமை மிக்கது.

(இருக் 3) எங்கும் நிறைந்திருக்கும் பாதுகாவலன், அன்பான அழிவில்லாத கோளங்களில் நின்று, உயர்ந்த பாதையைப் பாதுகாக்கிறான். தெய்வீகத் தீ படைக்கப்பட்ட அனைத்து

நற்றமிழில் நால் வேதம்