பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#

  • .

F#Ég 24

செடி கொடிகளின் வளர்ச்சியை எவன் அதிகப் படுத்துகிறானோ, தண்ணிப் பெருக்கை அதிகப்படுத்துகிறானோ, உலகு முழுவதையும் தனக்குரிய பெருந்தன்மையோடு ஆட்சி புரிகிறானோ, அந்தப் பெரிய ஆண்டகை நமக்குப் புகலிடம் தரட்டும். எல்லா வளங்களையும் அருளட்டும். மூன்று பருவங்களிலும் உரிய பேரறிவை நமக்கு வழங்கட்டும். (இருக் 7)

நோய்களைக் குணப்படுத்தி எங்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதற்காகத் தண்ணிரே, உன்னைப் பருகுகிறோம். எங்களுடைய மரபு விளங்கும்படி எங்களுக்குப் புத்துணர்ச்சியூட்டிடும் ஆற்றலை அளிக்கிறாய் நீ. - . (апцо 1839)

நகர்ந்து கொண்டேயிருப்பது அல்லது தற்காலிகமாக அசைவின்றி இருப்பது ஆகிய முறைமைகளின்படி இயங்கி வருபவை அன்னையின் செல்வர்களாகிய - மகிமை வாய்ந்த விண்மீன்கள். அவையே சமன்மை நிலையைப் பாதுகாத்து வரும் உலகத்தின் பாதுகாவலர்கள். இயற்கையின் கட்டளைக் கேற்ப செயல்படுகின்றன, இருட்டை விரட்டுகின்றன. (இருக் 2)

புடவிப் படைப்பை அரவணைத்துச் செல்கிறது தெய்வீக ஆற்றல்;

శ్ర* நற்றமிழில் நால் வேதம்