பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

ஆட்டு மந்தைக்குப் புலி எப்படியோ, அது போன்றே கொடியவர்களுக்கு நான் ஓர் அரிமா. அரிமாவை நேருக்கு நேர் காணும் பொழுது நாய்கள் எப்படி அதிர்ந்து போகின்றனவோ, அதேபோல் என்னை நேரில் காணும் பொழுது கொடியவர்கள் அதிர்ந்து போகின்றனர். (அதர் 4)

நீர்க்கசியும் உலகப் பேராழியை நான் தாங்குகிறேன். நிலையான அமைப்பிலுள்ள இருப்பிடத்தின் பேரொளிப் பகுதியைத் தாங்குகிறேன். அழிவற்ற தன்மையின் பாதுகாவலனாகிய நான் உலகின் எல்லாப் பரப்புகளையும் படைக்கிறேன்.

(இருக் 10)

துயனோ, தூய்மையற்றவனோ

எவராயிருந்தாலும் சரி, நான் ஏற்படுத்தியிருக்கும் நிலையான அறத்தைத் தன் வலிமையால் தகர்க்க முடியாது. (அதர் 5)

உலகின் நாற்புறமும் என்னைப் பணிகின்றன. ஆழியின் அலைகள் எனக்குக் கீழ்ப் படிந்து நடக்கின்றன. (அதர் 9)

அறிவொளி பெற்ற மாந்தனே, இவற்றுக்குள்தான் நான் விண்ணையும் மண்ணையும் வைத்துள்ளேன். மெய்யறிவையும் வலிமையையும் பெற்றுவரும் மையங்களும் இங்கேதான் உள்ளன. உனது நெஞ்சத்தில் தெய்வீகமான ஒளியை வைக்கிறேன்.

த.கோ - தி.பூரீ