பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

இவற்றுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டு - வாழ்க்கையை நன்கு துய்த்து மகிழ்வாயாக. (யசுர் 7)

அவனே உலகங்கள் யாவையும் படைக்கிறான் அவற்றில் பரவிவிடுகிறான். நமது பல குறைகளைப் பொறுத்துக் கொள்கிறான். நல்லவர்களுக்கு எண்ணற்ற வகைகளில் உதவி புரிகிறான். - - கடவுணிள் அன்பர்களுக்காகவே இவற்றைச் செய்கிறான். ஓய்வின்றி அவன் உழைக்கிறான்; பருவங்களை ஞாயிறு நெறிப்படுத்துவது போன்று அவன் தன் அன்பர்களுக்கு வழி காட்டுகிறான்; அவன் உண்மையைக் கடைப்பிடிக்கிறான்; தீய ஆற்றல்களை ஒதுக்கிவிடுகிறான். வாழ்க்கை என்னும் கொந்தளிக்கும் கடலைக் கடக்கத் தன் அன்பர்களுக்குக் கை கொடுக்கட்டும்

(இருக் 3)

நற்றமிழில் நால் வேதம்