பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

எல்லாம் வல்ல மேலான வல்லமையுள்ள இறைக்கு எங்கள் பணிவன்புகள் உரித்தாகுக. (அதர் 10)

அனைத்து வல்லமையுள்ளவனுக்கு எங்கள் போற்றுதல்கள்.

நிலத்தையும், நீள்விசும்பையும் உயர்வருமைதான் தாங்குகிறது. இயற்கை அன்னையின் கருணைக்கு நம் மதிப்பருமை என்றுமே உண்டு. தீமைகளை அழிக்கிறது இறையன்பு. வாழ்க்கையில் நான் புரிந்திடும் பழிகளுக்குக் கழுவாயாக என் தவ வலிமையைக் காணிக்கை ஆக்குகிறேன். (இருக் 6)

திருவுருக்கொண்ட பேரின்பமும், அமைதியின் தோற்றமுமாயுள்ள அந்தப் பெருமைவாய்ந்த இறைவனுக்கு எங்கள் பணிவன்புகள். பேரின்பம், அமைதி, நற்பண்புகள் இவற்றின் உறைவிடமாகிய இறைவனுக்குப் பணிவன்புகள். இவற்றை வாரி வழங்குகிற இறைவனுக்கு மீண்டும் அன்பு வாழ்த்துகள். (யசுர் 16)

எல்லாவற்றையும் ஏற்று நடத்தும் பேரிறைவனே, உனக்கு வணக்கம். t } தண்டனை அளிக்கும் ஆற்றலுள்ள இறைவனே,

உனககு வணககம. கொடியவர்களை அழித்தொழிக்கும் உன் வில் அம்புக்கு வணக்கம்.

நற்றமிழில் நால் வேதம்