பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

ஆகியோரின் பாதுகாப்பு பெறுபவர் என்றும் தோல்வியே அடைவதில்லை. (இருக் 1)

எவனைத் தெய்வீக ஆற்றல்கள் தங்களின் தோள்மீது வைத்துக் கொள்கின்றனவோ, - எவனைத் தீய எண்ணம் படைத்தவர்களிடமிருந்து காக்கின்றனவோ, அவன் அனைத்து இடையூறுகளையும் வெற்றி கொள்கிறான். (இருக் 1)

அவன் என்றும் வெல்லப்படுவதில்லை, உலகின் அனைத்து செல்வங்களையும் அவன் எளிதாக அடைகிறான் தன்னைப் போன்றே துணிவினர்க்குத் தந்தையாகிறான். (இருக் 1)

அன்னம்போல் உயிர்த்துக் கொண்டு புகழ் வாய்ந்த அறிவாளியாயிருக்கிறவனை எப்போதும் விழிப்புடன் இருக்கின்ற, இறைவன் எல்லோர் முன்னிலையிலும் சிறந்தவனாய் வீற்றிருக்கிறான். புடவியின் நீராவிச் சுருள்களாகிற முகத்திரையால் அவன் முகவாய் திரையிடப்பட்டுள்ளது. (இருக் 1)

முழு ஆற்றலையும் தன் கையில் வைத்துக்கொண்டு உண்மையான தொண்டர்களுக்கு அதைப் பகிர்ந்தளிக்கிறான் அவன். - ஆழ்ந்த நினைப்பாலும், மாசற்ற பற்றுறுதியினாலும் இறைவனை முனிவர்கள் நன்குணர்கிறார்கள்

(இருக் 1)

நற்றமிழில் நால் வேதம்