பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

வேண்டுகிறோம். மெய்யறிவு பெற, உன் பாதுகாப்பை நாடுகிறோம். -

ټد ره غ9e)

இறைவா, உன் அன்புக்கு நான் மட்டும் தானா, உன்னுடைய அன்புறவு மீண்டும் கிட்டுமா, இல்லை, அவையெல்லாம்.

நான் இழந்தது தானா? இறைவா, என்றும் நான் உன்னுடைனேயே இருக்க வேண்டும், எனக்கு முழுமையான மகிழ்ச்சி கிட்டவேண்டும். நெஞ்சைத் துழாவும் பொழுது, என் கனவுகளில் நான் உன்னையே காண்கிறேன். உன்னிடமே உரையாடுகிறேன். - (இருக் 7)

உன் பொங்கி வழியும் அன்புகொண்டு உள்ளத் துய்மையுடன் உன் புகழ் மேலும் மேன்மை பெறப், பணிவுடன் வேண்டுகிறோம். நிறை,மனத்தின் ஊற்றுக் கண்ணாக

எங்கும் பரந்திருக்கும் - விண்ணொளியின் உள்ளுயிர் எங்கள் நெஞ்சத்தில் உள்ளது. மூதாதையே, எங்களை வாழ்த்தியருளும். (இருக் 8)

பேரொளிப் பிழம்பே, என்னுடைய நற்குணங்களும் செய்கைகளும் நின் விருப்பத்திற்கு இசைந்தனவாக இருக்க அருள் செய். நின்னிடமுள்ள என் அன்பு "யான்" என்கிற

த.கோ - தி.யூரீ