பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

போற்றி வழிபடுதல்

போற்றிப் புகழத் தக்க மேலாண்மைப் பெரும, காப்பில்லாதோரைக் காப்பவன் நீ. புடவிப் படைப்பின் ஈகையே உண்மையைத் தேடுபவனுக்கு நாலா திசைகளிலிருந்தும் கடவுள் அருட்பேறு கிட்டுமாக. (இருக் 1)

அப்பழுக்கற்ற அறத்தைக் கையாளும் பேரொளிப் பெரும, ஐம் பூதங்களையும் இணங்கிச் செயல்படச் செய்பவன் நீயே. உன் ஆணையின் பேரில் ஞாலங்கள் யாவையும் உலகின் நன்குணர செய்யப்பட்ட மேற்கவிகையுடன் ஒன்றுகின்றன. விரைந்து வந்து எங்கிருப்பினும் அவை நமக்கு உதவுகின்றன. (இருக் 1)

கடவுளே, நீ மிகமிக உயர்ந்தவன், அளவற்ற மேன்மைக்கும் மேன்மையன் நீ, எல்லையற்றவன் நீ, வானகத்தின் வெளிக்கப்பால்

e挙* நற்றமிழில் நால் வேதம்