பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63

எவ்வாறு பயணிப்பது, எப்படி விரைவாகச் செயல்படுவது

அனைத்தும் நீ அறிவாய். (இருக் 6) $

உன் அருள்பார்வை எங்கு யார்மேல் படுகிறதோ, அங்கங்கு அவன் சிறப்படைகிறான். மேன்மைபொருந்திய ஆற்றலை அருமையான வீறியத்தை அவனுக்களிக்கிறாய் நீ,

அவன் நெஞ்சத்தினை உன் வீடாக்கிக் கொள்கிறாய் நீ. (இருக் 6)

நின்று நிலைகொண்டிருக்கும் இறைவா, உனக்கு எங்கள் மனமுவந்த பாராட்டுகள்; எங்களுக்குக் கிடைத்தவற்றை நிறுத்திக் கொள்கிறோம். உணதருளால் மேலும் மேலும் பெறுகிறோம். எல்லாம் உன் கருணையாலன்றோ? (இருக் 7)

அழியும் மாந்தர்களிடையே நீ அழியாதவன். அவர்கள் புரியும் புனிதமான பணிகளைக் கட்டிக் காக்கிறீர்கள். ஆகவே யாதொரு புனிதப் பணியைத் தொடங்கு முன்னும் உன்னை வழிபடுகிறோம்.

(இருக் 8)

எந்த இடத்திலும் நீ ஒன்று போலவே இருக்கிறாய். நீ படைத்த மக்கள் யாவரிலும் நீயே மேலான ஆற்றலுள்ளவன். எங்கள் போராட்டங்கள் யாவிலும் உன் துணையை நாடுகிறோம். (இருக் 8)

தகோ - தி.யூரீ