பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 -

நாங்கள் சென்றிடாமல் தடுத்து ஆட்கொள்வாய்.

உன்னுடைய இடத்தில் நின்று நிலைத்து, வாழ்ந்து ஒருவரையொருவர் அன்புறுவோமாக. (இருக் 4)

$

மேன்மையனே, வையத் தலைவனே, பேரொளி ஒளியின்மை

இவ் இரண்டிற்கும் தலைவனே, செல்வம் ஊட்டம் அருள் ஆற்றல் யாவற்றிலும் தலை சிறந்தவனே,

இந்த விடியற்காலைப் பொழுதில் உன்னைத் தொழுகின்றோம். (அதர் 3)

இறையன்பர்களே, பறந்து செல்லும் அன்னங்களைப் போல்,

ஆழ்ந்த பற்றார்வத்துடன் போற்றிப் பாடல்களைப் பாடுங்கள். இயற்கை அன்னையின் வளம்பெற்று அருளின்பக் கடலான இறைவனின் பெருமையில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். (யசுர் 6)

அன்பர்களே, நாமெல்லோரும் ஒன்று சேர்ந்து இறைவனுக்கு நம் பற்றார்வத்தையும் அன்பையும் செலுத்துவோம். (யசுர் 36)

த.கோ - தி.யூரீ