பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

உறுதியான தீர்மானம்

மெய்யறிவின் மூலமுதலாகவும் ஒளிக்கே ஒளி அளிப்பதுவமாயிருக்கிற எனது இந்த மனம் எங்கெங்கெல்லாமோ அலைந்து திரிகிறது. நான் உறக்கத்தில் இருந்தாலும் சரி, விழித்திருந்தாலும் சரி, இந்த நிலை தொடர்கிறது. ஒ, மனமே, உயர்ந்த நோக்கு எது என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நீ தான். (யசுர் 34)

சமுகத் தொடர்புள்ள நிகழ்ச்சிகளில் இறைவன் நியமித்த கடமைகளை ஊக்கமுள்ள, அறிவாளிகள் செய்து முடிக்கின்றனர். இது இயல்பான செயலே. ஒ, மனமே, உயர்ந்த நோக்கு எது என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நீ தான். (யசுர் 34)

உயிர்கள் யாவற்றிலும் மனமே அறிவின் இருப்பிடம்.

மனமே மெய்யறிவின் ஊற்று, # த.கோ - தி.யூரீ .تشس