பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ś%« 76

தெய்வீக உறுதிமொழி

வாழ்வின் அனைத்துஆற்றல்ளும் நற்பணியில் ஈடுபட்டிருப்போருக்கே துணை புரிகின்றன. (இருக் 1)

பாரம் மிகுந்திருந்த மரக்கிளையிலிருந்து பழுத்த பழம் தானே உதிர்வதுபோல, இறைவனுடைய வளம் மிகுந்த பரிசுகளான மெய்யறிவும் செல்வமும் அவன் அடியார்களுக்குத் தாமே கிட்டுகின்றன. (இருக் 1)

இறைவன் அனைத்து ஆற்றலுள்ளவன். அதே சமயம் நிறைவாக முழு நம்பிக்கையுடன் எவர் அவனைச் சரணடைகிறார்களோ, அவர்களுக்கே அவனுடைய துணையும் பாதுகாப்பும் கிடைகின்றன.

(இருக் 1) இறைவனிடம் வைத்திருக்கும் திடமான நம்பிக்கை மட்டுமே மனிதனுடைய அச்சத்தையும் அறியாமையையும் நீக்க வல்லது. (இருக் 2)

நற்றமிழில் நால் வேதம்