பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

வாழ்த்து

ஒளிமயமாய்த் திகழும் தேவனே, செல்வம், புகழ், நிமிர்ச்சி ஆகிய மேன்மைகளை எனக்கு அருள்வாயாக. வானகத்தில் ஒளி வீசும் பரிதி போன்று நான் மிளிர வேண்டும். (அதர் 10)

ஈடு இணையற்ற தேவனே, வலிமையில் நிகளில்லாதவனே, நீதி வழங்குவதில் அறத்திலிருந்து வழுவாதவனே, தீங்குகளிலிருந்து எங்களைப் பாதுகாப்பாகக் கரை சேர்த்து விடு, உடல், மனத் தொடர்பான சோர்வை அகற்றி விடு.

படைப்புத் தொழிலின் சிற்பியே, எந்தக் காரியத்தையும் அப்பழுக்கின்றி செய்து முடிப்பவனே, - அறிவின் உறைவிடமே,

உண்மையின் காவலனே, எங்களைக் காத்துக் கொள்ளத் தேவையான துணை அருளிச் செய்

த.கோ - தி.பூதி