பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

81

எங்களுக்கு எல்லா வளமும் அருளட்டும், அனைத்து வல்லமையுள்ள இறைவன் எங்களுக்கு உற்சாகம் நல்கட்டும், எவரும் எதிர் கொள்ள முடியாத வல்லவனே, எங்களுக்கு எல்லா நலங்களும் அளிப்பாய்.

(இருக் 5)

தேவனே, உலகத்திற்கு நன்மை, செய்பவனே, எங்களிடம் குடிகொண்டிருக்கும் கொடிய ஆற்றல்களை அழித்துவிடு. எங்களுக்கும், வருங்கால மரபினருக்கும் பயன்படும்

அருள் செல்வத்தை அளி. (இருக் 6)

மற்றவர்களுக்கு உதவிடும் வகையில் செல்வத்தைப் பயன்படுத்துவோருக்கு, - அள்ள அள்ளக் குறையாத செல்வத்தை வாரி வாரி வழங்குவாய், எம் இறைவா. (இருக் 6)

மண்ணுக்கும், விண்ணுக்கும் தலைவனே, இரண்டையுமே உன் ஆளுகைக்குக் கொண்டு வா. மங்காத ஒளியுடனும், குன்றாத புகழுடனும் அவை விளங்க அருள் செய்வாய். (இருக் 7)

எங்கள் செல்வச் செழிப்பு அமைதிக்கு வழி காட்டட்டும். சமூகக் கட்டுப்பாடு இணக்கத்திற்கு வழி வகுக்கட்டும். அறிவு வார்ந்த தேடுதல்கள் மேன்மைக்கு இட்டுச் செல்லட்டும். நமது வளமையின் நோக்கமே வேற்றுமையில்

§