பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

戀 காடுகளில் வளமும் மூலிகைச் செடிகளும் மரங்களும்

ஜி மகிழ்வூட்டுகின்றன. jo தொலைவிலுள்ள தெய்வீக ஆற்றல்களும் எங்களிடம்

அன்புடன் மிகுமகிழ்ச்சி ஊட்டட்டும். (இருக் 7)

ஒளிமிகு உலகப் பெரும, -

வானம், நீர், பாறைகள், காடுகள், செடிகொடிகள்

யாவற்றிலும் உன் சீர்த்தி பட்டொளி வீசுகிறது.

(இருக் 2)

பரந்த ஒளிகொண்டுள்ள செம்பருதி எங்கள் அமைதிக்காகவே உதயமாகட்டும். அடிவானத்தின் நாற் பகுதிகளிலும் அமைதியையும் இணக்கத்தையும் ஏற்படுத்தட்டும். வேரூன்றி இருக்கிற மலைகள் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கட்டும். ஓடும் ஆறுகள் நலம் காக்கும் நீரை எங்களுக்குத் தரட்டும், வயல்கள் செழித்து ஓங்கட்டும். (இருக் 7)

ஒளிமிகுசெம்பொருளே, எங்களைக் காப்பவனே, எங்களுக்கு அமைதி அளித்திடுக. பேரொளிப் பிழம்பே, எங்களுக்கு ஊக்கம் தந்திடுக, இணக்கம் காண முகில்கள் எங்களுக்குப் பெருமகிழ்ச்சி ஊட்டட்டும் பேருலகின் தனிப்பெரும் ஆட்சிக்குரியவன் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கட்டும். (இருக் 7)

நற்றமிழில் நால் வேதம் سمسة