பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

பேருலக இறைவன் அருளிய வாழ்த்துகள் எங்களுக்கு மன அமைதியைத் தரட்டும். தூய எண்ணங்கள் கொண்ட தெய்வீக வாய்மொழிகள் எங்களுக்கு நன்மை பயக்கட்டும். புனிதமான பணிகளில் பூசை செய்பவர்கள் எங்களுக்குத் துணை புரியட்டும். பரந்த உள்ளங் கொண்ட கொடையாளிகள் எங்கள் அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் உறு துணையாய் இருக்கட்டும். தெய்வீக ஆற்றல்கள் யாவையும் எங்களுக்கு இன்னமைதியையும், மகிழ்ச்சியையும் அளிக்கட்டும்.

w (இருக் 7)

$

என்றும் நிலைத்திருக்கும் உண்மையைக் காத்துவருகிறவர்கள் இணக்கத்திற்கு வழி வகுக்கட்டும். நமது எண்ணங்களும், செய்கைகளும் நமது மகிழ்ச்சிக்கு ஒத்துழைக்கட்டும். பட்டறிவும், மெய்யறிவுமுள்ள உயர்ந்த பெரியோர்கள், அமைதியையும் செழிப்பையும் நமக்களிக்கட்டும். ஆதி முனிவர்கள் நம்மிடம் கருணை காட்டட்டும். கூடவே, சமூக நல் நிகழ்ச்சிகளுக்காக நாம் விடும் வேண்டுகோள்களுக்குச் செவிமடுக்கட்டும்.

- (இருக் 7)

பிறவி எடுக்காத ஒரே பாதமுடைய பெருமானே, (பகவானுடைய ஒருபாதமே உலகுமுழுவதையும் # அளக்கவல்லது) - . . . . நாங்கள் அமைதியாக ஒற்றுமையுடன் வாழ அருள்புரிக.

த.கோ - தி.யூரீ