பக்கம்:நற்றமிழில் நால் வேதம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

வான வெளியில் மிதந்துவரும் முகில் கூட்டங்கள் நமக்கு வளமை அளிக்கட்டும். பேராழிகள் இணக்கத்தை ஏற்படுத்தட்டும். நீரிலிருந்து தோன்றும் நெஞ்சுரமும், ஆற்றலும் நம்மிடம் கனிவு காட்டட்டும். இறையருளால் காக்கப்படும் நடுவிண் வெளியும், வானமும், நமக்கு மகிழ்வூட்டுமாக, (இருக் 7)

தன்னிகளில்லாத தலைவனே, அறிவுமுற்றுப் பெற்ற ஆதி முனிவர்கள் நுகரும் முற்றுணரும் ஆற்றலை எனக்கு இன்றே அளிப்பாய்.

r (யசுர் 32)

இயற்கை அன்னை எங்களுக்கு அருள்பாலிக்கட்டும் மண்ணுலகம் கருணையுடன் இருக்கட்டும் ஓடும் ஆறுகள் அமைதியுடன் இருக்கட்டும். செடி கொடிகளும், மூலிகைச் செடிகளும் அமைதியுடன் இருக்கட்டும், கடந்த காலம் கருணை காட்டியது. எதிர் காலமும் அவ்வாறே அருள்புரியட்டும்.

(அதர் 19)

நற்றமிழில் நால் வேதம்