பக்கம்:நற்றிணை-2.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 நற்றிணை தெளிவுர்ை. 249. அலரெழச் சென்றது தேர்! பாடியவர் : உலோச்சனர். திணை : நெய்தல். துறை: வரைவிடை மெலிந்தது. ((து. வி.) வரைவிடை வைத்துப் பிரிந்து சென்ருன் தலைவன். அதனலே மிகச்சோர்ந்து மெலிவுற்ருள் தலைவி. அவளுடைய மனத்தெழுந்த கலக்கத்தின் காரணமாக அவள் புலம்புவதுபோல அமைந்த செய்யுள் இது.) இரும்பின் அன்ன கருங்கோட்டுப் புன்னை. லேத் தன்ன பாசில அகந்தொறும் வெள்ளி யன்ன விளங்கிணர் காப்பண் பொன்னின் அன்ன நறுந்தா துதிரப் புலிப்பொறிக் கொண்ட பூநாறு குரூஉச்சுவல் 5 வரிவண்டுதலின் புலிசெத்து வெரீஇப் பரியுடை வயங்குதாள் பந்தின் தாவத் தாங்கவும் தகைவரை கில்லா ஆங்கண் மல்லலஞ் சேரி கல்லெனத் தோன்றி அம்பல் மூதூர் அலரெழச் 10 சென்றது அன்ருே கொண்கன் தேரே! தெளிவுரை : இரும்பைப்போன்று விளங்கும் கரிய கிளை களையுடையது புன்னைமரம். அதன் பசுமையான இலைகள் நீலம்போலத் தோன்றும். அவ் இலைகளுக்கு உள்ளிடந் தோறும் வெள்ளியைப் போல வெண்ணிறம் கொண்ட அதன் பூங்கொத்துக்கள் விளங்கித் தோன்றும். அப்பூக்களி லுள்ள பொற்றுகள் போன்ற நரிய தாது மணல்மேட்டிலே உதிரும். புலியின் பொறிபோலும் புள்ளிகளைக் கொண்ட தாக மணங் கமழும் நிறம்பெற்ற அம் மணல்மேடு தோன்றும். வரியமைந்த வண்டுகள் அவ்விடத்தே மொய்த்து ஊதா நிற்கும். அதனைக் காணும் விரைந்த செலவையுடைய குதிரைகள், அதுதான் புலிபோலும் என மயங்கி அச்சங் கொள்ளும். பலமுறை இழுத்து நிறுத்தவும் நிறைக்கு அடங்கி நில்லாவாய்ப் பந்து போலத் தம் கால்களால் தாவிக் குதிக்கும். அதனைக் கண்டு வளப்பமிக்க நம் சேரியின்கண் உள்ளாரெல்லாம், கல்லென் னும் ஆரவாரத்தோடு அவ்விடத்தே சென்றனர். அம்பல் கூறுவார் வாழ்கின்ற நம் மூதூரிடத்தும் அதேைல நம்மைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/112&oldid=774104" இலிருந்து மீள்விக்கப்பட்டது