பக்கம்:நற்றிணை-2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நற்றினை தெளிவுரை 253. கவின் எய்திய_காப்பினள்! பாடியவர் : கபிலர். திணை: குறிஞ்சி. துறை: செறிப் பறிவுறீஇ வரைவுகடாயது. (து. வி.) தலைவி இல்லிடத்தேயே செறிக்கப் பெற் றனள்; இனிக் களவுற்வும் வாய்ப்பது அரிது! ஆதலின் நீதான் இவளை வர்ைந்துவந்து மணந்து கொள்ளலே இனிச் செய்தற்குரியது' என்று, தலைமகனிட்ம் தலைவியின் தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.) புள்ளுப்பதி சேரினும் புணர்ந்தோர்க் காணினும் பள்ளி யானையின் வெய்ய உயிரின கழிபட வருந்திய எவ்வமொடு பெரிதழிந்து எனவ கேளாய் கினையினி நீகனி உள்ளினும் பனிக்கும் ஒள்ளிழைக் குறுமகள் 5 பேரிசை உருமொடு மாறி முற்றிய பல்குடைக் கள்ளின் வண்டுமகிழ்ப் பாரி பலவுறு குன்றம் போலப் பெருங்கவின் எய்திய அருங்காப் பினளே! தெளிவுரை : ஒளி செய்கின்ற அணிகலனை அணிந்த இளமகள் நின் தலைவி. அவள் பெரிய முழக்கத்தோடேகூடிய இடியோசையோடு மழைமேகங்கள் மிகுதியாகச் சூழ்ந்த தும், பலவாகிய பனங்குடையிலே இட்டு உண்ணும் கள் ளாகிய வளவிய களிப்பையுடையதும், பலா மரங்கள் நிறைந்ததுமான, பாரியது பறம்புமலையினைப் போலக் கண்டார் வியக்கின்ற பேரழகினையும் எய்தினள். அத ஞலே, இல்வயின் செறிக்கப் பெற்றனளாய் அரிய காவலை உடையாளும் ஆயினுள். அதேைல, இனி நின் ளுேடும் களவுக்குறிசேர்ந்து இன்புறுதலைத் தள்னுள்ளத்தே மிகுதியாக நினைப்பினும், அதுதான் வாயாமை கருதி நடுங்கு வாளாயினள். நீயுந்தான், புள்ளினம் தத்தம் துணையோடுங் கூடினவாய்த் தத்தம் கூடுகளிடத்தே சென்றடைந்து கூடியிருந்தாலும், கணவனும் மனைவியுமாகக் கூடியிருப்போரைக் கண்டாலும், படுக்கை யுற்றுக் கிடக்கின்ற யானையைப் போலச் சுடுமூச்சினை உடையை ஆயின. மிகுதியான நினைவிலே கலங்கிய வருத்தத்துடனே பெரிதும் உள்ளம் அழிந்தனையாய், என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/120&oldid=774113" இலிருந்து மீள்விக்கப்பட்டது