பக்கம்:நற்றிணை-2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 121 மேலும் அச்சுறுத்துவதுபோல இடிகள் மிகவும் முழங்கி அதிருகின்ற தன்மையது, உயர்ந்த மலைப்பக்கத்து வழியும் ஆகும். மென்மையுடைய நம் தோள்கள் தளர்வுற்றுப் போக நாம் வருத்தமுற நேரினும், இன்றிரவுப் போதில் அவர் இவற்றைக் கடந்து இங்கு வாராதிருத்தலே மிகவும் நல்லதாகும்! சொற்பொருள் : கழுது-பேய். கால்-காற்று. கிளர. எழுந்து வீசா நிற்ப. ஊர்மடிதல்-ஊரவர் செயலவிந்து உறங்கிக் கிடத்தல். குறிஞ்சி-குறிஞ்சிப்பண். 'உருகெழு மரபின் குறிஞ்சி' என்றது, கானவர் முருகயர்தற்கும் வேட்டம்போவதற்கும் இயக்கும் பண் ஆதலினல். குறிஞ்சி பாடுதல்-குறிஞ்சிப் பண்ணிலே பாட்டுப் பாடுதல். கடிகாவல். நகர்-பெருமன. கானவர் என்றது, மனைக் காவலரை. முகை என்றது மலைச்சரிவிலுள்ள பாறையிடுக் குகளை, தோள் நெகிழ்தல் அவரை நாம் அடையப் பெருமையால். பெயல்-மழை. கால்-காற்று. பெயல் கால் மயங்கிய-காற்ருேடு கலந்து பெருமழையும் பெய்ய. "பொழுது கழி பாள்ை’ என்றது, இரவின் நடுயாமப் பொழுதின. திருமணி.அழகியமணி. உருமு-இடிக்குரல். ஒங்குவரை யாறு-உயர்ந்த வரைப்பக்கத்தே அமைந்த வழி. விளக்கம் : "யாமத்து வரின் பேயணங்கும் என அஞ்சு வேம், ஊரவர் துயின்று ஊரரவம் ஒய்ந்ததாகலின் அவன் வரவைக் காவலர் எளிதிற் காண்பரெனக் கலங்குவேம், அன்றி அவரும் துயிலாராதலின் அவரால் அவனுக்கு ஏதமுறுமோவென நடுங்குவேம், வழியிடையே களிறுக்குத் தோற்ற வேங்கையாலும் மணி தேடி, உழலும் அரவாலும் துன்புறலும் நேருமோவெனவும் கலங்குவேம், இடியும் மழையும் காற்றுங் கூடிய இந்நள்ளிரவில் உயர்வரையிடத்து வழியும் தெளிவாகத் தோன்ருதே எனவும் திகைப்பேம், தலின் இன்று அவர் வாராதிருத்தலே நல்லது. அவர் ja: வருந்தி ள்ம் தோள்கள் நலியினும் நலியட்டும்’ என்று மனநொந்து கூறுகின்ருள் தலைவி. இதனால், அவன் தமக்கு இன்றியமையாதவன் என் பதும், அவனுக்கு ஏதமெனில் தாம் உயிர்வாழாத் தன்மையேம் எனவும் உணர்த்தி, இந்நிலையினை ஒழித்த்ற்கு அவன் தன்னை விரைய மணந்துகொள்ளலே நன்மை தருவ தாகும் என்பதும் புலப்படுத்தினள். இதன் பயன் வரைவு வேட்டல் ஆகும். g b-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/125&oldid=774118" இலிருந்து மீள்விக்கப்பட்டது