பக்கம்:நற்றிணை-2.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | | . நற்றின. தெளிவுரை 147 - | 269. பாலார் துவர்வர்ய்ப் புதல்வன்! பாடியவர் : எயினந்தை மகளுர் இளங்கீரனர். திண: பால, துறை: தோழி வாயின் ம்றுத்தது (1): செலவழுங் குவித்ததூஉம் ஆம் (2) ((து.வி.) பரத்தையிற் பிரிந்து வந்தாளுகிய தலைமகன் விடுத்த தூதர்கள் சென்று தோழியை வாயில் வேண்ட, அவள் தலைவனது செயலைக் கடிந்து அதற்கு மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் (1); பிரியக் கருதிய த மகனுக்குத் தலைவியின் நிலைமையை அவன் வாயிலர் கேட்பக் கூறிப் பிரிவைக் கைவிட்த் தூண்டும் வகையில் அமைந்த செய்யுள் எனினும் பொருந்தும் (2).] . குரும்பை மணிப்பூண் பெருஞ்செங் கிண்கிணிப் பாலார் துவர்வாய்ப் பைம்பூண் புதல்வன் மாலைக் கட்கின் மார்பூர்பு இழிய அவ்வெயி றெழுகிய செவ்வாய் மாண்நகைச் செயிர்தீர் கொள்கைகம் உயிர்வெங் காதலி 5 திருமுகத் தலமருங் கண்இனந்தல்கலும் பெருமர வள்ளியிற் பிணிக்கும் என்னர் சிறுபல் குன்றம் இரப்போர் . அறிவார் யாரவர் முன்னி யவ்வே. தெளிவுரை : குரும்பை போன்ற மணியைக் கொண்ட பூணுகிய பெரிய செவ்விய விண்கிணியையும், பால் உண்ணு கின்ற சிவந்த வாயினையும், மற்றும் பலவான பசும்பொன் கலன்களையும் உடையவன் நம் புதல்வன். அவன், மாலை விளங்குவதும், கண்ணுக்கு இனிதானதுமாகிய தலைவனின் மார்பினிடத்தே ஏறியும் இறங்கியுமாக விளையாட்டு அயர்வான். அதனைக் கண்டு மகிழ்ந்த அவனது அழகிய எயிறுகள் நிரல்பட அமைந்த சிவந்த வாயிடத்தே மாட்சிமைப்பட்ட நகையும் தோன்றும்! குற்றமில்லாத கோட்பாட்டை உடையவளான உயிர்போல விரும்பப் பட்ட காதலியானவள், அதனைக் கண்டு பொருது, தன் திருமுகத்திலே உல்வும் கண்கள் கலங்கியவளாவாள். நாள்தோறும் பெருமரத்தைச் சுற்றித் தழுவிப் படர்ந் திருக்கும் வள்ளிக்கொடியைப் போல, நம்மையும் மேலே செல்லவிடாது பிணித்துக் கொள்வாள் என்று அவர்தாம் | | |

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/151&oldid=774147" இலிருந்து மீள்விக்கப்பட்டது