பக்கம்:நற்றிணை-2.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 169. ೧೧urgi: வாவல்-வெளவால். சிதர்.சிறுதுளிகள். சுரம்-சுரநெறி. அத்தம்-பாலை, ஓமை-ஒரு வகை மரம். செல்வம்-செல்வம்போலப் போற்றும் விழாச் சிறப்பு. *. இறைச்சி: 1. வேம்பின் பழத்தைத் தின்பதை வெறுத்து இருப்பைப் பழத்தை விரும்பிய வெளவாலானது, வெய்ய பனியானது உறைப்ப இருக்கும்’ என்றனள். இது பிறந் தகத்துச் செல்வத்தைத் துய்ப்ப்தை வெறுத்துத் தலைவனின் செல்வத்தைத் ဂ္ယီဒီး நாடிச்சென்ற தலைமகள் அவ் வில்லத்தாரோடும் எவ்வாறு மனம்ொத்து இருப்பாளோ என்று தாய் கலங்கியதைக் குறித்ததாம். . 2. பசியுற்ற பிடியாலே உண்ணற் பொருட்டு உதைக்கப்பட்டுப் பொழிந்த ஒமையின் அடிமரமானது, வெயிலில் ஒளி செய்யும்’ என்றனள். இது, மகளால் வெறுத்து நீக்கப்பட்டன்ன்நிலைதான் பொழுது விடிந்ததும், பலராலும் அறியப்பட்டுத் துாற்றப்படும் என்று வருந் தியதாம். - . விளக்கம்: 'வேம்பின் ஒண்பழம் எனவும், இருப்பைத் தேம்பால் செற்ற தீம்பழன்’ எனவும் வேறுபாடு குறித்த நயம் காண்க. அருகிருக்கும் முன்னதை வெறுத்துத் தொலை விலுள்ள பின்னதை நாடிக் காலை வேளையிலே சென்று : துயரத்தையும் அடையும் வாவல் என்றனர். இது, தலைவி இல்லத்தை விட்டகன்று அவனுடனே சென்றதான பேதைமையை நினைந்து கூறியதாகும். வைகுபனி யுழந்த வாவல் என்றது, அவளும் புலர் காலையிலே அகன்று சென்றனள் எனக் குறிப்பதாகும். இரவிலே பிடியால் உதைத்துச் சிதைக்கப்பெற்ற ஒம்ையின் செவ்வரை, பொழுது புலர்ந்ததும் வெயில்பட்ட காலையிலே இமைக்கும் என்றது, அவள் இருந்த நிலைமைக்கு நல்ல உவமையாகும். புலியேற்றை யானையொடும் பொருதிப் புண்படுத் தியதைக் கூறியது, வழியும் ஏதமுடைத்து என்றதாம். இலையும் தழையும் அற்றுப்போகவே மரத்தைச் சிதைத்து உண்ணலாயிற்று என்றது, வழியின் கொடிய வெம்மையைக் குறித்ததாம். . - 'சிலம்பு கழி நோன்பு மணத்துக்கு முன் செய்யப்படும் ஒரு விழா! தி: "கன்னிமை கழித்தல்' என்பர். அது செய்யாததற்கு முன்பே அவள் அவனுடன் சென்றதற்குத் தாய் வருந்துகின்றனள். பிறருண' என்றது இவ்விழாவைத் தலைவன் இல்லத்தார் கண்டு களிப்பர் ப்ோலும் என்று, அந்த நினைவாற் கூறியதாம். pA.-ll

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/173&oldid=774171" இலிருந்து மீள்விக்கப்பட்டது