பக்கம்:நற்றிணை-2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l நற்றிகண தெளிவுரை - 175 - - - இரேகைகளும் வாட்டமுற்றன: நல்ல நெற்றியிடத்தே. பசலையும் பாய்ந்தது; பிரிவுத் துயரம் மிகுந்த நீக்குதற்கரிய காம நோயானது, நம் காதலனலே இந்நிலையிலே நமக்குத் தரப்பட்டது. இதனை அறியாத அன்னையானவள், தெய்வக் குற்றம் எனக் கருதிப் படிமத்தானுக்கு இதனை அறிவித் தனள். வெறிக்கள்த்தே, முன்னிட்ப்பெற்ற் கழங்கிளுல்ே ஆராய்ந்தான் அறிவு வாய்ந்த வேலனும். அவன் சொன்னற் போல, இதுதான் முருகனைப் பராவுதலாலே தணியுமாயின், அதுவும் நன்றுதான்! இம் மலைசாரலினிடத்தே அகிற் கட்டையைச் சுடுகின்ற கானவன், ஆங்குள்ள சருகில் முதற் கண் நெருப்பை மூட்டுதலினலே எழுகின்ற புகையானது வானத்தையே மறைக்கும். இத் தன்ழைப்பட்ட நாடு விளங்கிய வெற்பனேடு அமைந்த நம் தொடர்புதான், இனிக் கழிந்தே விட்டது போலும்! சொற்பொருள்: தோடுதொகுதி. செறிப்பு-.ெ ச றி ந் திருக்குமாறு அமைத்தல்! இலங்குதல்-வி ளங் கு த ல். கோடு.பக்கம். அவ்வரி-அழகிய இரேகைகள். படர்-காம நோயாகிய துன்பம்; பற்றிப் படர்தலால் 'படர் என்றனர்: அருநோய்-தீர்த்தற்கரிய நோய். முதுவாய்-அறிவு வாய்ந்த முதுமை வாய்ந்த, வேலன்-வெறியாடுவோன். உவல்-சருகு. ஆடு மழை மங்குல்-இயங்கும் மழை மேகம். - விளக்கம் : களவுக் காலத்து இடை இடையே உண் டாகும் சிறுபிரிவாலேயே தலைவி பெரிதும் நலிவெய்து கின்றனள்; அதனைத் தெய்வக் குற்றமோவெனத் தாய் கருதினள்; வெறியாடலுக்கு ஏற்பாடும் செய்தனள்; இனி இற்செறிப்பும் நிகழும்; எனவே, விரைய மணந்து கொள் வதற்குத் தலைவன் முயல்வேண்டும் என்பதாம். கானவன் அகிற் கட்டையைச் சுடுதல் தினைக் கொல்லையை விரிவு படுத்தக் கருதியாகும். - இவர்களது பேச்சைக் கேட்கும் தலைவன், அவளை மணந்து கொள்வதற்கான விரைந்த முயற்சிகளைச் செய்தலிலே விருப்பங் கொள்ளுகின்றவன் ஆவான் என்பதாம். . இறைச்சி: "கானவன் சுடுபுகையானது மேகம்போலத் தோன்றி மறைக்கும் என்றனர். இது, களவின்பமே சிறந்த தெனக் காட்டி நம்முடைய தொடர்ந்த ஒழுக்கம் நம் காதலனையும் மயக்காதிற்கும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/179&oldid=774177" இலிருந்து மீள்விக்கப்பட்டது