பக்கம்:நற்றிணை-2.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 நற்றிணை தெளிவுரை போல, அவர்கள் உறவைக் குறித்த அம்பலும் அலரும் மிகுதியாயிற்று' என உரைத்து, அவை தீர்தற்பொருட்டு அவளை அவன் விரைய வந்து வரைந்து கொள்ளல் வேண்டும் என்று குறிப்பாக உணர்த்துவதாக அமைந்த செய்யுள் இது.) அரவிரை தேரும் ஆரிருள் நடுநாள் இரவின் வருதலன்றியும் உரவுக்கண வன்கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி, உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு வளைவாய் ஞமலி ஒருங்குபுடை யாட 5 வேட்டுவலம் படுத்த உவகையன் காட்ட நடுகாற். குரம்பைத் தன்குடிவயிற் பெயரும் குன்ற நாடன் கேண்மை நமக்கே கன்ருல் வாழி தோழி! என்றும், அயலோர் அம்பலின் அகலான் பகலின் வருடம், எறிபுனத் தானே! தெளிவுரை : பாம்புகள் இரைதேடித் திரிந்தபடியிருக் கும், மிக்க இருள்பரந்த நள்ளிரவாகிய இரவுக்காலத்திலே வருதல் அல்லாமலும், வலிய கணைகளையும் வன்மை பொருந் திய கைகளையும் கொண்ட கானவன், வெவ்விய வில்லை வளைத்து, நெஞ்சிடத்தே செலுத்தி வீழ்த்தப்பட்ட முள்ளம் பன்றியின் ஏற்றையோடு, வளைந்த வாயையுடைய நாய் கள் ஒருபக்கத்தே கூடிக் குரைத்தபடியே வந்து கொண் டிருக்க, வேட்டையாடி வெற்றியோடு வந்ததனலே உவகை கொண்டோனை கானவன், காட்டகத்தேயுள்ள கால்களை நட்டுக் கட்டிய குச்சுவீடுகளைக் கொண்ட தன் ஊர்க்குச் செல்வான். அத்தகைய குன்ற நாடனின் உறவுதான், தோழி! நமக்கும் நலம் தருவதாகுக! நீயும் வாழ்க! அவன் தான், அயலோர் உரைக்கும் அம்பலைக் கேட்டும் நம்மை விட்டு அகலாதவன் ஆதலோடு, பகற்போதிலும் குறியிடத் துக்கு காடு எறித்துச் செய்யப்பட்ட திணைப்புனத்துக்கு, வருதலைத் தவிர்தலும் இலனவன் கண்டாய்! சொற்பொருள் : நடுநாள் - நள்ளிரவுப் போது. உரவுவலிமை; கணையின் வலிமையாவது அது செவ்விதாக வடிக் கப்படல். வன்கை - வலிமையான கை; அம்பு செலுத்து தற்கான வலிமையைக் குறித்தது. முளவுமான் - முள்ளம் 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/184&oldid=774183" இலிருந்து மீள்விக்கப்பட்டது