பக்கம்:நற்றிணை-2.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 நற்றிணை தெளிவுர்ை இருளைச் செய்து, மிக்க பெயலையும் பொழிந்து, கடுமை யான இடிக்குரலையும் முழக்கிக்கொண்டு, கார்காலத்தைச் செய்தபடி, என்னைத் துன்புறுத்துதற்கு எதிரே தோன்ரு நின்றது. அவ்விடத்தே, புன்செய்க் காட்டுக் கொல்லை களிலே நிரைமேய்க்கும் கோவலர்கள், இரவுப் போதிலே எரிகொளுத்தி வைத்துள்ள பெருமரத்தினது வேரடிக் கட்டையைப் போலக் காமநோயும் உள்ளேயே கனிந்து பெருகிக் கனலாகின்றது. அவர் அருளும் இல்லாதேன்; யான் அளிக்கத்தக்கேன்! என் நிலையைக் காண்பாயாக! சொற்பொருள் : புடை பெயர்தல் - குடை சாய்தல்; நிலைகெடல். நளிகடல் - பெருங்கடல். செறிதக - செறிவு பொருந்த, உழை - பக்கம்;கொல்லை - புன்செய்த் தோட்டக் கால்கள். கோவலர் - பசுநிரை மேய்ப்போர்; எல்லி - இரவுக்குத் துணையாகக் கொளுத்திய நெருப்பு. வேரடி . வேராகிய அடிக்கட்டை; இது நின்று நெடுநேரத்துக்கு எரியு மாதலின் இதைப் பயன்படுத்துவர். விளக்கம்: கொல்லையிற் கோவலர் கொளுத்திய எரி தணலானது இராப்பொழுது முற்றவும் கனிந்து எரியுமாறு போலத், தன் உள்ளத்துக் காமநோயும் இரவு முற்றவும் கனிந்து தன்னை அணுவணுவாக எரித்தபடி யிருக்கும் என்றனள். தன்னைப் பெருமரவேருக்கு ஒப்பிட்டது, தன் குடிப்பெருமை கருதியும், தானுற்ற நோயை உள்ளத்தள வானே அடக்கிக் காக்க முயன்றும், அது கைகடந்து மிகுதலை நினைந்தும் ஆம். 'நிலம் புடை பெயர்வதாயினும் கூறிய சொற் புடை பெயர்வதோ இலரே என்றது, தலைவனின் வாய்மை பிறழா மாண்பை உணர்த்தியதாம். அதனை நினைப்பித்து அவனை வரைவுக்கு விரைவுபடுத்தியதும் ஆம். 290. புதுமலர் ஊதும் வண்டு ! பாடியவர் : மருதனிள நாகனர். திணை : மருத ம். துறை: (1) பரத்தை விறலிமேல் வைத்துத் தலைமகளே நெருங்கிச்சொல்லியது; (2) பரத்தையிற் பிரிய வாயிலாய்ப் புக்க பாணன் கேட்பத் தோழி சொல்லியது உம் ஆம். ..வி.) பரத்தை தலைவியின் ஊடலைத் தணிக்க நினைக் ఇఱి. 2ಿ. கூறுவாள் போலத் தலைவனின் இயல்பை உன்ரத்து, அவனத் தலைவியும் ஏற்றுக் கொள்ளத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/192&oldid=774192" இலிருந்து மீள்விக்கப்பட்டது