பக்கம்:நற்றிணை-2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை 205 தெளிவுரை : எம் நெஞ்சமே! புதிதாக வருகின்ற மக்கள், வழியூடே வருகின்ற தன்மையை நோக்கியபடியே காத்திருப் பவர், ஆறலைப்போராகிய கள்வர்கள். அவரைக் குறிவைத்துச் சிவந்த கணையை அம்பிலே தொடுத்து எய்பவரும் அவர். சினந்த பார்வையினரான அவரது, வாய்மடித்துப் போர்த்த தண்ணுமையின் முழங்கும் குரலைக் கேட்டதும், பருந்தின் சேவலானது அச்சங்கொண்டு, தன் கூட்டம் வாழும் அவ் விடத்தை நோக்கிப் பறந்து செல்லும். கடத்தற்கரியதும், கவருபட்டதுமான அச்சந் தரும் அகன்ற அவ்விடத்தேயுள்ள பெரிய பலவாகிய குன்றுகளைக் கடந்து போவதுபற்றியும் ஒருபால் நினைப்பாய். அடுத்து, இவளுடைய கரும்பெழுதிய பணைத்த தோள்களையும் எண்ணி நோக்குவாய்! ஒருபாலும் மனம்பற்ருமல் மயங்குகின்ருய்! நல்ல வேப்பந்தாரினை அணிந் தோனை பொற்றேர்ச்செழியனின் கூடல் நகரத்திலே, பண்டு. யாம் ஒருதலையாகத் துணிந்து பொருள்தேடி வருவதாகத் தோழிபாற் சொல்லிய அருமையான சொற்கள்தாம் என்னே! வெளிய அரும்பு மலர்ந்த பெரிய மலரின் மணங் கமழும் கூந்தலை உடையவள் என் காதலி! இவளைப் பார்த்தபின்னர், பெருமலைகளைக் கடந்து பொருள் தேடிவரச் செல்லுவதுதான் நம் காதலுறவுக்குப் பொருத்தமாகுமோ? கருத்து இவளைப் பிரிதல் ஆற்றேம் ஆதலின், பொருளை நாடிச் செல்லுதலைச் சிறிதுகாலம் மறந்திருப்பாய் என்பதாம். சொற்பொருள் : வம்பமாக்கள் - வெளியூராரான புதி யர்கள். வருதிறம் - வருகின்ற தன்மை. செங்கணை - சிவந்த கணை, சிவப்பு முன்னர்ப் பிறர் உடலிற் பாய்ந்து பெற்ற குருதிக் கறை. மடிவாய்' என்றது, மடித்து வைத்துக் கட்டப்பெற்ற தோலையுடையது என்று பொருள்தரும். எருவை - பருந்து வகையுள் ஒன்று. அது கிளைவயிற் பெயர்தல், தண்ணுமை ஒலியால் அச்சங்கொண்டு என்க. நனந்தலை - அகன்ற இடம். கரும்பு - தோளில் எழுதும் ஒப்பனை. ப்ணைத்தோள் - பருத்த தோள். ஒருதிறம் - ஒரு பக்கம். கூடல்' என்றது மதுரையை. "ஆங்கண் - அவ்விடத்தே. வாண்மை - வெண்மை. இரும் ப்ோது - பெரிய மலர்கள். - விளக்கம் : 'வம்பமாக்கள் என்றது, வழியின் கொடுமை யறியாது வந்த புதியவர் என்பதற்கு. செங்கண தொடுத்த என்றது, மறைந்து நின்று அம்பு தொடுப்பவர் என்பதையும், செயிர் நோக்கு எதிர்வரினும் அஞ்சாது சினந்து நோக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/209&oldid=774210" இலிருந்து மீள்விக்கப்பட்டது