பக்கம்:நற்றிணை-2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

\ † : 208 நற்றிணை தெளிவுரை Ιω") α) பரத்தைபாற் சென்றிருந்த தலவனின் தூதகை வந்த பாணனிடம், காமக் கிழத்தியின் தோழியான விறலி, தன் தலைவி, தலைவனை ஏற்க விரும்பிலள் என்று உணர்த் துவதாக அமைந்த செய்யுள் இது; (2) வரைந்து வருதலில் மனஞ் செலுத்தாமல், களவிலேயே ஒழுகிவரும் தலைவனிடம், தலைவியை மண்ப்பது கருதினகை, அய்லான் ஒருவன் விரும்பி வந்து போயினன் என்று, தோழி கூறுவதாக அமைந்த செய்யுளும் இது: சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென அதனெதிர் மட்த்தகை ஆயம் கைதொழு தாஅங்கு உறுகால் ஒற்ற ஒல்கி ஆம்பல் தாமரைக்கு இறைஞ்சும் தண்டுறை ஊரன் சிறுவள விலையெனப் பெருந்தேர் பண்ணிஎம் 5 முன்கடை கிறீஇச் சென்றி.சி னேனே! யுேம், தேரொடு வந்து போதல் செல்லாது கெய்வார்க் தன்ன துய்யடங்கு நரம்பின் இரும்பாண் ஒக்கல் தலைவன் பெரும்புண் ஏனர் தழும்பன் ஊனுர் ஆங்கண் 10 பிச்சைசூழ் பெருங்களிறு போல வெம் - அட்டில் ஓலை தொட்டன கின்மே! தெளிவுரை : நெய் வடித்தாற் போலப் பிசிரடங்கிய நரம்புகளை இழுத்துக் கட்டியுள்ள யாழையுடைய, பெரிய தற்றத்தைக்கொண்ட பாணர்களின் தலைவனே! விளங்குகின்ற தாடியணிந்தவளான அரசகுமாரியானவள் சினந்தாளாக. அவ்விடத்திலே அதற்கு எதிராக மடப்பத்தையுடைய தோழியர் கூட்டமானது, அச் சினத்தைத் தண்விக்கும் பொருட்டாகக் கைதொழுது வணங்கிற்ைபோல, மிகுதியான காற்று மோதுதலாலே ஆம்பல்வளைந்து தாமரை மலரிடத்திலே சாய்ந்து வணங்கியபடியிருக்கும், தண்ணிய துறையையுடைய ஊருக்குரியவன் தலைவன்! அவன், சிறு வளையினையுடைய இவளுக்கு விலையாவது இதுவேயெனப் பெருந்தேரை ஒப்பனை செய்து, எமது முற்றத்தின்கண்ணே நிறுத்திச் சென்றுள்ளனன் கண்டாய்! அவனுடைய தேரினிலே வந்த நீயும், அவன் பின்னகவே போதலைச் செய்யாமல், போர்க்களத்திலே பெரும் புண்ப்ட்டவனுகிய அழகினைக் கொண்டதழும்ப்ன் என்பானின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/212&oldid=774214" இலிருந்து மீள்விக்கப்பட்டது