பக்கம்:நற்றிணை-2.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

宛翠 - நற்றிணை தெளிவுரை இழையணி மகளிரின் விழைதகப் பூத்த டுேகளி இணர சுடர்வீக் கொன்றைக் காடுகவின் பூத்த வாயினும் நன்றும் வருமழைக்கு எதிரிய மணிகிற இரும்புதல் கறைகிறம் படுத்த நல்லிணர்த் தெறுழ்வி 5 தாஅம் தேரலர் கொல்லோ சேய்காட்டுக் களிறுஉதைத் தாடிய கவிழ்கண் ணிடுறுே வெளிறில் காழ வேலம் டிேய பழங்கண் முதுகெறி மறைக்கும் வழங்கரும் கானம் இறந்திசினேரே ! 10 தெளிவுரை: தொலைவான நாட்டிடத்துள்ளதும், களிறு காலால் உதைத்து ஆடுதலினலே மேலெழுந்த புழுதியானது செல்பவரின் கவிழ்ந்த கண்களிலும் விழுந்து மறைப்பதா யிருப்பதும், உட்புழையின்றி வயிரம் பாய்ந்த வேலமரங்கள் உயரமாக வளர்ந்திருப்பதும், பாழ்பட்டதுமான பழைய நெறியினையும் அப்புழுதி மூடிமறைப்ப்துமான, செல்வதற்கரிய காட்டு வழியினும், பொருளார்வத்தினல் நம்மைப் பிரிந்து சென்றுள்ளவர் நம் காதலர். அவர் தாம் பொன்னிழை யணிந்த மகளிர்போல விருப்பந்தருமாறு பூத்துள்ள, நீண்டு சுரிந்த கொத்துக்களிலே விளங்கும் பூக்களைக் கொண்ட கொன்றையானது, காடெல்லாம் அழகு பெறுமாறு பூத்திருக்கின்றதாயினும், அதனையும், நன்மைப் பொருட்டாக வருகின்ற மழைக்கு எதிரேற்று விளங்கும் நீலமணியின் நிறத்தையுடைய பெரிய புதரிட்த்தே வீழ்கின்ற தஞலே, வெண்ணிறம் தோற்றுமாறு செய்த நல்ல கொத்துக் களையுடைய தெறுழமலர்கள் வீழ்வதனையும் காண்பவர், இதுதான்.கார்கால்ம் என்று தெளிய மாட்டாரோ? கருத்து : கார்காலம் வந்ததென அறிந்தும், அவர்மணம் பொருளைவிட்டு நம்மிடத்தே வருதலிற் சென்றதில்லையே' என்பதாம். - சொற்பொருள் : சுரி - சுரிதலுட்ைய. எதிரிய - எதிரேற்ற. நரை நிறம் - வெண்ணிறம். தெறுழ் - ஒருவகைக் காட்டு மரம். வெளிறு புட்புழை. காழ் - வயிரம். பழங்கண் - வருத்தம், முதுநெறி - பழைதான நெறி; பலகாலும் பலரும் சென்று திரும்பும் பழையதான வழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை-2.pdf/216&oldid=774218" இலிருந்து மீள்விக்கப்பட்டது